கட்டாரில் புதிய $15 பில்லியன் விமான நிலையம்

டுபாய்க்கு போட்டியாக கட்டார் இன்று தனது $15 பில்லியன் பெறுமதியான புதிய விமான நிலையத்தை (Hamad International Airport) திறந்து வைத்துள்ளது. இந்த விமான நிலையம் 2009 ஆண்டில் சேவைக்கு வந்திருக்கவேண்டு. ஆனால் அது பல வருடங்களின் பின் இன்று சேவையை ஆரம்பிக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் கட்டாரில் நடைபெற இருக்கும் World Cub உதைபந்தாட்ட போட்டிக்கு இந்த புதிய விமான நிலையம் பெரிதும் பயன்படும். Qatar Airways, Emirates Airways, Etihad, Lufthansa, United போன்ற […]

இஸ்தான்புல்லில் Eurasia சுரங்கம்

Eurasia சுரங்க வேலைகள் இன்று துருக்கி பிரதமரால் ஆரம்பிக்கப்பட்டன. துருக்கியின் நகரமான இஸ்தான்புல்லூடாக சென்று கருங்கடலை அடையும் Bosphorus நீரிணைக்கு கீழாக இந்த வாகன போக்குவரத்துக்கான சுரங்கம் அமைகிறது. இந்த சுரங்கம் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைப்பதால் Eurasia என பெயர் இடப்பட்டுள்ளது. 2016 இன் இறுதியில் இவ்வேலைகள் முற்றுபெறும் என கூறப்படுகிறது. கிழக்கு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தட்டும், மேற்கு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தட்டுமாக மொத்தம் இரண்டு தட்டுக்களை இந்த சுரங்கம் கொண்டிருக்கும். […]

2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம்

2013 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வர்த்தகம் (ஏற்றுமதி+இறக்குமதி) முதல் தடவையாக அமெரிக்காவை விட அதிகமாகி, இதுவரை முதலாவதாக இருந்து வந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி உள்ளது என்கிறது World Trade Organization (WTO) தரவுகள். சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த ஏற்றுமதி $2.21 ட்ரில்லியன். இது 2012 ஆம் ஆண்டைவிட 8% அதிகம். அதேவேளை சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த இறக்குமதி $1.95 ட்ரில்லியன், இது 2012 ஆம் ஆண்டிலும் 7% […]

இந்திய மக்கள் சபை தேர்தல் 2014

இந்தியாவின் Lok Sabha வுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. 2014-04-07 முதல் நடைபெறும் தேர்தல் மற்றும் வாக்கு கணக்கெடுப்பு எல்லாம் முடிவடைய சுமார் ஒரு மாதம் எடுக்கலாம். முதல் நாளில் அஸ்ஸாம், திரிபுரா போன்ற பகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கி இறுதியில் மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் முடிவடையும். இந்த தேர்தலில் 814,500,000 வரையானோர் வாக்களிக்க தகுதி கொண்டுள்ளனர், ஆனால் சுமார் 55% மட்டுமே வாக்களிக்கும். தற்போது Lok Sabha வின் மொத்த ஆசனங்கள் 543. […]

யுத்தத்தை விரும்பும் எதிரியை அறியாத அமெரிக்கர்

Ukraine கலவரம், ரஷ்யா Crimea வை தனதாக்கல், மேற்கு நாடுகள் ரஷ்யாவுடன் முரண்படல் எல்லாம் உலகறிந்த அண்மைக்கால விடயங்கள். இந்த Ukraine விவகாரத்தில் அமெரிக்க மக்கள் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் இவ்விடயம் சார்ந்த கருத்துக்கள் திடமான அறிவை அடிப்படையாக கொண்டதா? இல்லை, என்கிறது அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற கருத்து கணிப்பு ஒன்று. அமெரிக்காவின் Survey Sampling International நடாத்திய கருத்துக்கணிப்பின்படி ஆறில் ஒரு அமெரிக்கரே (1/6) Ukraine ஐ சரியாக உலக படத்தில் […]

கியூபாவில் தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் Social Media

Facebook மற்றும் Twitter போன்றதொரு social mediaவை கியூபாவில் ஆரம்பித்து அதன் மூலம் அத்தீவில் அரசியல் மாற்றங்களை கொண்டுவர அமெரிக்கா செய்த முயற்சி ஒன்றும் தோல்வியில் முடிந்துள்ளது. The Associate Press தெரிவித்த இந்த தகவலை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ZunZuneo என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த முயற்சி 2012 ஆம் ஆண்டில் முடிவடைந்த்துள்ளது. அமெரிக்காவின் Agency for International Development (USAID) என்ற நிறுவனத்தினால் $1.3 மில்லியன் செலவழித்து செய்யப்பட்ட இந்த […]

பாலஸ்தீனியர் ஐ.நா. நோக்கி நகர்வு, அதை தண்டிக்கும் அமெரிக்கா

இஸ்ரவேலும் பாலஸ்தீனியர் விடயத்தில் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவும் பாலஸ்தீனியரிடம் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டுமே: பாலஸ்தீனியர் பேச்சுவார்த்தை எத்தனை சந்ததிகளுக்கு இழுத்தடிக்கப்பட்டாலும், இஸ்ரவேலுடனும் அமெரிக்காவுடனும் மட்டுமே பாலஸ்தீனியர் தமது அரசியல் விடயங்கள் பற்றி பேசவேண்டும். குறிப்பாக பாலஸ்தீனியர் தமது விடயத்தை ஐ.நா. எடுத்து செல்வது இஸ்ரவேலையும் அமெரிக்காவையும் ஆத்திரம் அடைய செய்யும். ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்பட்டது பாலஸ்தீனியரின் தலைமை அதையே இன்று செய்துள்ளது. ஐ.நா. வின் 15 சபைகளில் உறுப்பினராக இணைவதற்கு பாலஸ்தீனியர் கையொப்பம் இட்டுள்ளனர். இவ்வாறு […]

இலங்கையில் யுத்த குற்றத்தை விசாரிக்க ஐ.நா. முடிவு

இலங்கையில் யுத்தம் முடிந்து 5 வருடங்களின் பின் ஐ.நா. அங்கு யுத்த குற்றங்கள் நடைபெற்றனவா என்று விசாரிக்க வியாழன் (2014-03-27) முடிவு செய்துள்ளது. ஐ.நாவின் பிரிவான The UN Human Rights Council இல் நடைபெற்ற அமர்வில் இந்த விசாரணைக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 23 நாடுகளும் எதிராக சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளும் வாக்கு அளித்துள்ளன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. முன்னர் தாம் இந்த விசாரணைக்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக […]

தொடர்கிறது Cold-War, எரிகிறது யுக்கிரேன் – 3

ரஷ்யாவின் சோச்சியில் (Sochi) ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக்கொண்டு இருந்த பொழுது பூட்டின் (Putin) இராணுவத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக குறைவு என்பதை நன்கு அறிந்த மேற்குலக அரசுகள், ஜனநாய முறைப்படி Ukraine இல் ஆட்சிபுரிந்த ரஷ்யா ஆதரவு அரசை ஜனநாய முறைக்கு அப்பாலான வன்முறைகள் மூலம் துரத்தின. பின் உடனடியாக தமக்கு ஆதரவான யுக்கிறேனியர் (Ukraine) கொண்ட அரசை அமைத்து விடயத்தை வென்று விட்டதாக நம்பியது மேற்குலக அரசியல். ஆனால் முன்னாள் KGB உறுப்பினரான ரஷ்யாவின் தலைவர் […]

227 பயணிகளுடன் தவறியுள்ள மலேசிய விமானம்

மலேசிய நேரப்படி சனிக்கிழமை காலை 12:41 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட Malaysian Airlines விமானம் MH370 விமான போக்குவரத்து தொடர்புகளை இழந்துள்ளது. இதில் 227 பயணிகளும் 12 பணியாளரும் இருந்ததாக விமானசேவை நிறுவனம் கூறியுள்ளது. இது ஒரு Boeing 777-200 வகை விமானமாகும். இவ்வகை விமானம் 310 முதல் 450 பயணிகள் வரை கொள்ளக்கூடியது. நேர அட்டவணைப்படி இந்த விமானம் பெய்ஜிங் நேரப்படி காலை 6:30 மணிக்கு பெய்ஜிங்கை அடைந்திருக்கும். ஆனால் விமானம் […]