ரஷ்யாவினதும், அமெரிக்காவினதும் மறைமுக மோதலுக்கு யுக்கிரேனில் பெருமளவு உயிர்கள் பலியாகினாலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் தொடர்ந்தும் NASA-Roscosmos உறவு மூலம் விண்வெளியின் இணைந்து இயங்க இன்று வெள்ளி அறிவித்து உள்ளனர். இன்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய விண்வெளி வீரர்கள் அமெரிக்க ஏவுகலம் மூலமும், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷ்ய Soyuz ஏவுகலம் மூலமும் International Space Station (ISS) என்ற ஆய்வு கூடத்துக்கு பயணிக்க முடியும். இந்த இணக்கம் இரண்டு நாடுகளின் நலனுக்காக செய்யப்பட்டதாம். யுக்ரேன், NATO, உலகநாடுகளின் […]
ரஷ்யாவுக்கும், NATO நாடான லிதுவேனியாவுக்கும் (Lithuania) இடையில் மோதல் ஒன்று நிகழ இருந்தவேளை ஐரோப்பிய ஒன்றியமும், NATO அணியும் அதை தவிர்த்து உள்ளன. ரஷ்யாவுக்கு சொந்தமான கலின்ங்கிராட் (Kaliningrad) என்ற Baltic கடலோர பகுதி ரஷ்யாவுடன் நில தொடர்பை கொண்டிருக்கவில்லை. அதனால் ரஷ்யாவில் இருந்து பொருட்கள் லிதுவேனியா மூலம் கலின்கிராட் செல்ல இரண்டு நாடுகளிடையே இணக்கம் இருந்துள்ளது. ஆனால் ரஷ்யா யூகிரேனை தாக்க ஆரம்பித்த பின் ஐரோப்பிய நாடுகளும், NATO அணியும் ரஷ்யா மீது பெரும் பொருளாதார […]
இலங்கை சனாதிபதி பதவியில் இருந்து விலகும் தனது post-dated கடிதத்தை புதன்கிழமை திகதி இட்டு வழங்கிய கோட்ட புதனுக்கு முன்னரே இலங்கை விமான படைக்கு சொந்தமான Antonov AN32 வகை படைகளை காவும் விமானம் மூலம் மாலைதீவை அடைந்துள்ளார். நாட்டில் இருந்து இவர் வெளியேறுவதை குடியகல்வு அதிகாரிகள் குறைந்தது இரண்டு தடுக்க முனைந்து இருந்தாலும் இவர் பின் வேறு வழி மூலம் விமானப்படை விமானத்தில் வெளியேறி உள்ளார். இவருடன் இவரின் மனைவி Ioma வும், வேறு சிலரும் […]
2023ம் ஆண்டு இந்தியாவின் சனத்தொகை சீனாவின் சனத்தொகையிலும் அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. கணிப்பிட்டு உள்ளது. தற்போது இந்தியாவின் பிறப்பு விகிதம் 2.2 ஆக உள்ளது. தற்போது தாய் ஒன்றுக்கு 1.15 பிள்ளைகளை மட்டும் கொண்ட சீன சனத்தொகை அடுத்த ஆண்டு முதல் வீழ்ச்சி அடைய ஆரம்பிக்கும். சீனாவில் ஒரு பிள்ளை மட்டும் என்ற சட்டத்தை தளர்த்தி 2 அல்லது 3 குழந்தைகள் பெறலாம் என்று கூறினாலும் அங்கு சுவை கண்ட பெற்றார் அதிகம் பிள்ளைகளை கொண்டிருக்க […]
தமிழ், குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் தன்னை புத்திசாலி என்று நிறுவ சிங்களத்தை ‘மோட்டு சிங்களம்’ என்று கூறும். ஆனால் தற்கால நிகழ்வுகள் தமிழர் தான் மூடர் என எண்ண வைக்கிறது. வல்வெட்டித்துறையிலிருந்து ஹாட்லி கல்லூரிக்கு வந்த மாணவன் ஒருவன் தனது 6ம் ஆண்டில் ஒரு வகுப்பறை நாடகம் நிகழ்த்தினான். அந்த நாடகத்தின் பிரதான நோக்கம் சிங்களவன் ஒரு மூடன் என நிறுவதே. நாடகத்தின் பெயர் “சொன்னதை செய்யும் பாண்டா”. யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிங்கள ‘வேலைக்கார […]
ஜூலை 4ம் திகதி, அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று, சிக்காகோ (Chicago) சுதந்திர தின ஊர்வலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 7 பேர் பலியாகியும், 10 பேர் வரை காயமடைந்தும் இருந்தனர். அந்த துப்பாக்கி சூட்டை செய்த பாபி (Bobby என்று அழைக்கப்படும் Robert Crimo III) என்பவனின் குடும்ப இடர்கள் தற்போது வெளிவந்துள்ளன. பாபியின் தாயும், தந்தையும் நீண்ட காலமாக முரண்பாட்டில் இருந்துள்ளனர். தந்தை பொருளாதார நெருக்கடியிலும் இருந்துள்ளார். பெற்றோரின் முரண்பாடுகள் காரணமாக பல தடவைகள் போலீசார் […]
முன்னாள் ஜப்பானிய பிரதமரான Shinzo Abe மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். துப்பாக்கி சூட்டின் பின் அபே நிலத்தில் வீழ்ந்து உள்ளார். தற்போது வைத்தியசாலையில் உள்ள அவரின் நிலை வெளியிடப்படவில்லை. சந்தேக நபர் காவலில் உள்ளார். Nara என்ற நகரில் அபே பேச்சு ஒன்றை நிகழ்த்தும் வேளையிலேயே சுடப்பட்டார். உள்ளூர் நேரடி வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூட்டுக்கு ஆளான பின்னரும் அபே நினைவுடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அபே இரண்டு […]
Brazil, Russia, India, China, South Africa ஆகிய 5 நாடுகள் இணைந்து உருவாக்கிய BRICS என்ற பொருளாதார அமைப்பில் தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனா (Argentina) இணைய சீனா இன்று வியாழன் ஆதரவு வழங்கி உள்ளது. G20 அமர்வுக்கு இந்தோனேசியா சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சருடன் ஆர்ஜென்டீன வெளியுறவு சந்தித்த பின்னரே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் பொருளாதார ஆளுமைக்கு போட்டியா வளர்வதே BRICS பொருளாதார கட்டமைப்பு. 2001ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்ட வேளையில் […]
சுமார் 38 பிரித்தானிய அமைச்சர்கள் (secretaries) அல்லது உயர் அதிகாரிகள் பிரதமரை கைவிட்டு பதவி விலகி உள்ள நிலையில் பிரதமர் Boris Johnson பதவி விலக அழுத்தங்கள் வலுவாகி வருகின்றன. ஆனாலும் தான் பதவி விலகேன் என்கிறார் Johnson. ஒரே நாளில் பிரதமர் குறைந்தது 14 அமைச்சர்களை இழந்து உள்ளார். இன்று ஆளும் கட்சியின் இரு குழுக்கள் பிரதமரை சந்தித்து உள்ளன. அதில் ஒன்று பிரதமரை பதவி விலக்கும்படி அழுத்தி உள்ளது. ஆனால் மற்றைய குழு பிரதமரை […]
பிரித்தானிய Boris Johnson ஆட்சி தற்பொழுது பெரும் குழப்பத்தில் உள்ளது. பலர் Boris Johnson ஆட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இறுதியாக Alex Chalk என்ற அந்நாட்டு solicitor general தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே Rishi Sunak என்ற நிதி அமைச்சரும், Sajid Javid என்ற சுகாதார அமைச்சரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் இன்று செவ்வாய் வழங்கி உள்ளனர். இரண்டு பிரதான அமைச்சர்கள் சில நிமிடங்களில் பதவி விலகுவது பிரதமருக்கு […]