சோவியத் காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 ஆங்கில நாடுகளும் இணைந்து Five-Eyes என்ற ஒரு கண்காணிப்பு குழுவை உருவாக்கி இருந்தன. அவற்றின் அப்போதைய நோக்கம் சோவியத்தின் நகர்வுகளை, தொடர்புகளை, இராணுவ உண்மைகளை கண்டறிந்து, தம்முள் பகிர்ந்து கொள்வதே. இன்று வியாழன் அந்த Five-Eyes நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஹாங் காங்கின் பிரிவினை நோக்கம் கொண்ட கட்சியின் ஹாங் காங் அவை உறுப்பினர்கள் 4 பேரை சீனா தடை செய்தது தவறு என்றும், […]
2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அஸ்ரேலிய விசேட படைகள் குறைந்தது 39 அப்பாவிகளை கொலை செய்துள்ளன என்று அஸ்ரேலிய ஜெனரல் Angus Campbell இன்று வியாழன் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக செய்யப்பட்ட விசாரணைகளின் பின்னான அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது. கொலைகள் மூலம் வெற்றியை தேடும் “toxic competitiveness” மனநிலை கொண்ட விசேட படைகளான SAS மற்றும் Second Command Regiment இரண்டுள்ளும் ஓழுக்க கட்டுப்பாடு முறிந்து […]
சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் பெரியதொரு படைத்தளம் ஒன்றை அமைக்கும் கருத்தை அமெரிக்காவின் கடற்படை செயலாளர் (US Navy Secretary) Kenneth Braithwaite முன்வைத்துள்ளார். கடந்த செவ்வாக்கிழமை ஆய்வு இடம்பெற்ற அமர்வு ஒன்றின்போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் தம்முடன் நடாத்தப்படவில்லை என்று சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. தற்போது அமெரிக்காவின் 7 ஆம் படை (7th Fleet) ஜப்பானில் நிலைகொண்டுள்ளது என்றாலும், வளரும் சீனாவை எதிர்க்க அது போதியதல்ல என்ற கணிப்பு அமெரிக்காவுக்கு […]
சோவியத் காலத்துக்கு பின்னர் ரஷ்யா தனது முதலாவது கடற்படை தளத்தை சூடானில் (Sudan) அமைக்க உள்ளது. சூடான் செங்கடலோரம் இருப்பதால், இந்த தளம் ரஷ்யாவுக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு இரண்டுக்கும் பொதுவான தளமாக அமையும். இந்த தளத்துக்கான உரிமை 25 ஆண்டு கால ஒப்பந்தமாகும். அதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வசதியும் உண்டு. இந்த தளம் ரஷ்ய சட்டங்களுக்கு அமையவே செயற்படும், சூடான் சட்டங்களுக்கு அமைய அல்ல.. இந்த தளத்துக்கு வரும் ரஷ்யர்களை சூடான் தடையின்றி […]
சீனாவின் Chongqing நகரில் உள்ள பிரித்தானிய முகவர் நிலையத்தில் கடமையாற்றும் Stephen Ellison என்ற 61 வயது முகவர் (consul-general) ஆறு ஒன்றின் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது 24 வயது சீன பெண் ஒருவர் அந்த அவற்றுள் தடக்கி விழுந்துள்ளார். சம்பவத்தை அறிந்த முகவர் ஆற்றுள் குதித்து ஆபத்தில் இருந்த பெண்ணை கரைக்கு மீட்டுள்ளார். விழுந்த பெண் சில நிமிடங்கள் அசைவு இன்றி, முகத்தை நீருள் அமிழ்த்தியபடியே மிதந்தார். அந்த வழியே சென்ற பலர் வீடியோக்கள் […]
Moderna என்ற மருத்துவ நிறுவனம் தாம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து அதன் 3 ஆம் கட்ட பரிசோதனையில் 94.5% அளவில் கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாக கூறுகிறது. சில தினங்களுக்கு முன்னர் Pfizer தனது கரோனா தடுப்பு மருந்து 90% அளவிலான கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறி இருந்தது. Moderna தயாரிக்கும் மருந்து – 20 Celsius (minus 20 C) வெப்பநிலையில் வைத்திருக்கப்படக்கூடியது. அதனால் இது பல வறிய நாடுகளுக்கு இலகுவில் […]
அண்மை காலங்களாக இடம்பெற்றுவரும் எதியோப்பிய (Ethiopia) உள்நாட்டு யுத்தம் அண்டை நாடான எரித்திரியா (Eritrea) உள்ளும் நுழைந்துள்ளது. சனிக்கிழமை எதியோபியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சில எரித்திரிய தலைநகரில் உள்ள விமான நிலையத்தை தாக்கி உள்ளன. Tigray People’s Liberation Front (TPLF) என்ற எதியோப்பியாவின் வடமேற்கு பகுதியான Tigray பகுதி ஆயுத குழுக்களுவுக்கும் எதியோப்பிய அரச படைகளுக்கும் இடையே அண்மை காலமாக யுத்தம் இடம்பெற்று வருகிறது. எதியோப்பிய அரச படைகளின் உதவிக்கு எரித்திரியா வந்துள்ளதாக TPLF […]
இன்று ஞாயிரு (2020/11/15) முதல் 15 நாடுகள் அங்கம் கொண்ட Regional Comprehensive Economic Partnership (RCEP) என்ற வர்த்தக வலயம் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும், ASEAN அமைப்பில் அங்கத்துவம் கொண்ட புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாஒஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகளுமே இந்த புதிய வர்த்தக வலயத்துள் நுழைந்து உள்ளன. இந்த உடன்படிக்கையில் வர்த்தகம், சேவைகள், முதலீடுகள், இணைய வர்த்தகம், […]
இலங்கை Exclusive Economic Zone அடங்கிய கடல் பகுதியில் சீனாவின் இரண்டு ஆய்வு கப்பல்கள் அதிக காலமாக செயற்படுவதால் இந்தியா சந்தேகம் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இலங்கையும் சீனாவும் சீனாவின் அட்மிரல் Zheng He என்ற 15 ஆம் நூற்றாண்டு சீன அரசியல் மற்றும் வர்த்தக பிரமுகரின் அமிழ்ந்த கப்பல்களையும் அவற்றில் இருந்த பொருட்களையும் கண்டெடுக்கும் பணிக்கு இணங்கி இருந்தன. களனி மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்கள் இதில் பங்கு கொண்டிருந்தாலும் பணிகள் முற்றாக சீனாவின் கையிலேயே இருக்கின்றன. இதுவரை மேற்படி கப்பல்கள் 12 […]
வழமைக்கு மாறாக அதிக அளவு செல்வந்த அமெரிக்கர் நியூசிலாந்துக்கு நகர முயல்வதாக தரவுகள் கூறுகின்றன. அமெரிக்கா கரோனாவை முறைப்படி கட்டுப்படுத்தாமை, அங்கு போலீசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவின் எதிர்கால பொருளாதார நிலைமை ஆகியனவே சில அமெரிக்கரின் இந்த நகர்வு முயற்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது. சுமார் $2 மில்லியன் முதலீடு செய்வோர்க்கு நியூசிலாந்து investor (golden) visa வழங்கி வருகிறது. வழமையாக செல்வந்த சீனர்கள் இந்த விசாவில் அதிகம் நாட்டம் கொண்டடிருந்தனர். கடந்த வருடம் 43% golden […]