இந்தியாவை மீண்டும் வெப்பம் தாக்க ஆரம்பித்து உள்ளது. வழமைக்கு மாறாக இந்த ஆண்டு வெப்பம் சில கிழமைகள் முன்னதாகவே தாக்க ஆரம்பித்து. இந்தியா 122 ஆண்டுகளாக வெப்பநிலையை பதிவு செய்கிறது. அதன்படி மார்ச் சராசரி வெப்பநிலை 122 ஆண்டுகளில் அதிகமாக இருந்துள்ளது. தலைநகர் டெல்லி பகுதியில் தற்போது வெப்பநிலை 40 C ஆக உள்ளது. வரும் ஞாயிறு வரை வெப்ப கொடுமை தொடரும் என்றும், வெப்பநிலை 44 C ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. கடும் வெப்பம் […]
தமிழ்நாட்டு மாவட்டமான தஞ்சாவூரில் வீதி வழி சென்ற இந்து ஊர்வல வாகனம் ஒன்று உயர் அழுத்த மின் இணைப்பை தொட்டதால் ஏற்பட்ட விபத்துக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் இரு சிறுவர்களும் அடங்குவர். இந்த விபத்து புதன் அதிகாலை நிகழ்ந்துள்ளது. மேலும் 3 பேர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மின் தாக்கிய வாகனம் தீக்கும் இரையாகி உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 500,000 இந்திய ரூபாய்களை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. பிரதமர் […]
உலகின் தற்போதைய முதலாவது செல்வந்தரான Elon Musk மொத்தம் $44 பில்லியன் பணத்துக்கு Twitter நிறுவனத்தை கொள்வனவு செய்ய இணங்கியதற்கு அடுத்த நாளான இன்று செவ்வாய் அவரின் Tesla என்ற மின்சக்தியில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி $125 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. Twitter கொள்வனவுக்கு Musk $44 பில்லியன் பணம் வழங்க முந்தாலும், தான் $21 பில்லியன் பணத்தை செலுத்த உள்ளதாகவும் மிகுதியை வங்கி கடன் மூலம் செலுத்த உள்ளதாகவும் கூறி […]
அண்மை காலங்களில் சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் நிகழும் மோதல்கள் காரணமாக சீனர்கள் அஸ்ரேலியா செல்வது குறைந்து வந்துள்ளது. அதனால் அஸ்ரேலியா செல்லும் இந்தியர்களின் தொகை சீனர்கள் தொகையிலும் அதிகமாகி உள்ளது. தற்போது அஸ்ரேலிய சனத்தொகையின் 2.8% இந்தியராகவும், 2.3% சீனராகவும் உள்ளனர். முதலாம் இடத்தில் 3.8% பங்கை கொண்ட பிரித்தானியர் உள்ளனர். 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலத்தில் 373,000 இந்தியர் அஸ்ரேலியா சென்று குடியேறி உள்ளனர். அதே காலத்தில் 208,000 சீனர்கள் மட்டுமே […]
Facebook மூலம் எவராவது உண்மை செய்திகளை பெறுவதாக கருதினால் அவர்களுக்கு குறைந்தது அரை மண்டை பழுது என்று அர்த்தம். பல Facebook பாவனையாளர் முன், பின் ஆராயாது R-S Papers என்ற மூடர்கள் பேச்சை மீண்டும் பரப்பி வருகிறார்கள். மழைக்கும் பாடசாலை செல்லாத இந்த மூடர்கள் தமது துணைக்கு Dark-net என்ற உச்சநிலை அறிவாளிகளையும் இழுத்து உள்ளனர். மிக பிரதானமாக இந்த மூடர்கள் மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்ற பதங்களில் குழம்பி உள்ளனர். இலங்கையின் மொத்த கடன் […]
இன்று இடம்பெற்ற தேர்தலில் இம்மானுவேல் மகிறோன் (Emmanuel Macron) மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார். இம்முறை இவர் சுமார் 58% வாக்குகளை பெறுகிறார். 2017ம் ஆண்டு இவர் 66% வாக்குகளை பெற்று இருந்தார். இவர் தனது ஆதரவை பெருமளவில் இழந்து இருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மகிறோன் வெற்றியால் நிம்மதி அடைந்துள்ளனர். இவருக்கு எதிராக போட்டியிட்ட National Rally (NR) கட்சியின் Le Pen சுமார் 42% வாக்குகளை பெறுகிறார். National Rally […]
Facebook பொய்களின் தளம். மனிதரை மடையார் ஆக்கும் வல்லமை கொண்டது Facebook. ராஜபக்ச குடும்பம் இலங்கை மக்கள் பணத்தை அபகரித்ததை அறிய மக்கள் ஆவலாக உள்ள காலத்தில் சில விசமிகள் சூடான பொய் செய்திகளை பரப்பி கூதல் காய்கிறார்கள். தம்மை ‘anonymous hackers’ என்று கூறும் பொய் செய்தி புனைவோர் ராஜபக்ச குடும்ப சொத்துக்கள் என்று கூறி ஒரு பட்டியலை தயாரித்து உள்ளார்கள். அதில் சில ஏற்கனவே வேறு செய்திகளில் புகைப்படம் போன்ற சில ஆதரங்களுடன் வந்தன. […]
பண நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு $300 மில்லியன் முதல் $600 மில்லியன் வரையிலான உதவியை வழங்க இன்று வெள்ளி உலக வங்கி முன்வந்துள்ளது. இந்த உதவி அடுத்த 4 மாத காலத்தில் மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மட்டும் பயன்படுத்தப்படும். IMF உதவி வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும் என்று கூறப்பட்ட நிலையிலேயே உலக வங்கியின் உதவி கிடைக்கவுள்ளது. அதேவேளை இந்தியா மேலும் $500 மில்லியன் உதவியை எரிபொருள் கொள்வனவுக்கு வழங்கும். மேலும் $1 […]
தற்போது இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் ஜான்சன் (Boris Johnson) இந்திய பிரதமர் மோதியுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளார். ஆனாலும் இந்த உடன்படிக்கை விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த உடன்படிக்கை இந்தியா இலகுவில் பிரித்தானிய ஆயுதங்களை கொள்வனவு செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும் விரும்புகிறது. இந்தியா விதிக்கும் அதிக அளவிலான இறக்குமதி வரிகள் காரணமாக தம்மால் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று […]
சீனாவில் கல்வி கற்று, கரோனா காரணமாக இலங்கை திரும்பிய மாணவர்களில் சிலரை மீண்டும் சீனாவுக்கு அழைத்து அவர்களின் படிப்பை தொடர இடமளிக்கவுள்ளது சீனா. இந்த அறிவிப்பு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் வியாழன் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்திய மாணவர் எப்போது மீண்டும் சீனா செல்ல அனுமதிக்கப்படுவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. சுமார் 20,000 இந்திய மாணவர் சீன பல்கலைக்கழகங்களில் உயர் படிப்பை செய்கின்றனர். இவர்களில் அதிகமானோர் வைத்திய படிப்பை செய்கின்றனர். தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற […]