சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிலிப்பீன் சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் பொங்பொங் (Marcos Jr) முன்னணியில் உள்ளார். சுமார் 80% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பொங்பொங் சுமார் 25.9 மில்லியன் அல்லது 67.8% வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள தற்போதைய உதவி சனாதிபதி Leni Roberedo 12.3 மில்லியன் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார். ஜூன் 30ம் திகதி ஆட்சிக்கு வரும் பொங்பொங் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக பதவி வகிக்கலாம். பொங்பொங் வெற்றி […]
முன்னாளில் பிலிப்பீன் நாட்டை ஆண்ட சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோசின் (Ferdinand Marcos) மகன் திங்கள்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் சனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடும் என்று கருதப்படுகிறது. பொங்பொங் (Bongbong) என்று அழைக்கப்டும் மகன் Marcos Jr. தனது சர்வாதிகார தந்தையை ஒரு அரசியல் அறிவாளி (political genius), தாயை அதிஉயர் அரசில்வாதி (supreme politician) என்றெல்லாம் புகழ் பாடி இருந்தும் அவருக்கு பெருமளவு மக்கள் வாக்களிக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்வாதிகாரி பெர்டினன்ட் மார்க்கோஸ் காலத்தில் பல்லாயிரம் மக்கள் சட்டத்துக்கு […]
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் (Havana) இன்று இடம்பெற்ற ஹோட்டல் வெடிப்புக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்தும் உள்ளனர். அங்கே தேடுதல் பணிகள் தொடர்கின்றன. Hotel Saratoga என்ற இந்த ஹோட்டல் வெடிப்புக்கு எரிவாயு கசிவே காரணம் என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு எரிவாயு காவும் கனரக வாகனம் நிலைகொண்டிருந்தது. மொத்தம் 96 அறைகளை கொண்ட இந்த 19ம் நூற்றாண்டு ஹோட்டல் தற்போது புனரமைப்பு வேலைகளில் உள்ளதால் இங்கு உல்லாச பயணிகள் […]
2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் கரோனாவுக்கு சுமார் 14.9 மில்லியன் பேர் பலியாகி இருக்கலாம் என்று World Health Organization (WHO) தற்போது கணிக்கிறது. முன்னர் 5.42 மில்லியன் பேரே பலியாகி இருந்ததாக WHO கூறி இருந்தது. அதாவது முன்னைய கணிப்பிலும் உண்மை மரணம் 2.7 மடங்கு அதிகம். WHO பொதுவாக ஒவ்வொரு நாடுகளின் தரவுகளை பயன்படுத்தியே உலக அளவிலான கணிப்புகளை செய்யும். அதன் நோக்கம் ஒரு வரலாற்று அனர்த்தத்தை சரியாக பதிவு செய்வதே. ஆனால் பல […]
இலங்கையின் தற்போதைய டாலர் கையிருப்பு (foreign reserve) $50 மில்லியனிலும் குறைவு என்று கூறியுள்ளார் நிதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry). இரண்டு மாதங்களுக்கு முன் இத்தொகை $2.3 பில்லியன் ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் டாலர் இருப்பு சுமார் 70% ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இலங்கை தான் பெறும் வருமானத்துக்கும் அதிகமான அளவில் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இலங்கையின் மொத வருமானம் 1,500 பில்லியன் இலங்கை ரூபாய்கள் என்றும் […]
இலங்கை நடிகையான Jacqueline Fernandez (Miss Universe Sri Lanka 2006) என்பவரின் 7 கோடி இந்திய ரூபாய்கள் இந்திய அரசால் முடக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் (Sukesh Chandrashekhar) என்பவரின் பணம் என்று கூறுகின்றனர் இந்திய அதிகாரிகள். கர்நாடக மாநிலத்து பெங்களூர் நபரான சுகேஷ் சிறு வயதில் இருந்தே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் கூறி உள்ளனர். பின்னர் இவர் சென்னை நகருக்கு இடம்பெயர்ந்து […]
கனடாவின் Toronto நகரை அண்டிய Richmond Hill பகுதியில் (Yonge Street and Bond Crescent) புதிய வீடுகளை கொள்வனவு செய்ய முற்பணம் கட்டிய பலர் தமது கட்டு பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. Boss Luxury Towns என்ற புதிய Townhouse வீடுகளை கட்ட திட்டமிட்ட Ideal Developments என்ற நிறுவனம் மீது அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகளே காரணம். Shajirai Nadarajalingam என்பருக்கு சொந்தமான Ideal Developments நிறுவனம் சட்டப்படி பதிவு செய்து […]
சீனாவின் சியாமி (XiaoMi) என்ற தொலைபேசி தயாரிக்கும் நிறுவனத்தின் வங்கிகளில் இருந்த $725 மில்லின் பணத்தை இந்திய அரசு நேற்று சனிக்கிழமை முடக்கி உள்ளது. சியாமி இந்தியாவின் வெளிநாட்டு பணமாற்றில் குளறுபடி செய்துள்ளது என்கிறது. சியாமி அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. மேற்படி பணத்தை Xiaomi Technology India Private Limited அமெரிக்கா உட்பட்ட 3 நிறுவனங்களுக்கு நகர்த்தி உள்ளதாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவ்வாறான royalty செலுத்துமதி சட்டப்படியானது என்கிறது சியாமி. இந்தியாவில் அதிகம் smartphone […]
G20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான அமர்வு வரும் நவம்பர் மாதம் 15ம், 16ம் திகதிகளில் இந்தோனேசியாவின் Bali என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தற்போது G20 அமைப்பின் தலைமையை இந்தோனேசியாவே கொண்டுள்ளது. ரஷ்யா ஒரு G20 நாடாக இருந்தாலும் யுகிரைன் யுத்தம் காரணமாக அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் பூட்டினை G20 அமர்வுக்கு அழைக்க விரும்பவில்லை. ஆனாலும் இந்தோனேசியா அதற்கு இணங்கவில்லை. அதேவேளை யுகிரேனின் செலன்ஸ்கியை அழைக்க அமெரிக்கா விரும்பி இருந்தது. அதற்கு இணங்கிய இந்தோனேசியா பூட்டின், செலென்ஸ்கி இருவரையும் […]
யூகிரேனில் இடம்பெறும் யுத்தத்தில் எதிர்பார்த்ததற்கும் அதிக அளவில் ரஷ்ய tanks அழிந்து இருந்தன. அவற்றில் இருந்த படையினரும் பலியாகி இருந்தனர். இவ்வாறு ரஷ்ய tanks அழிந்தமை ரஷ்யாவின் யுத்த இழப்புகளுக்கும், பின்னடைவுக்கும் காரணமாக அமைத்தது. ரஷ்யா யுகிரேனின் தலைநகர் கியேவ்வை தாக்கும் முயற்சியையும் கைவிட்டு இருந்தது. தலைநகரை தாக்குவது இல்லை என்று ரஷ்யா அறிவிக்க இதுவே காரணமாக இருந்திருக்கலாம். இதுவே பெருமளவு ரஷ்ய படையினர் அழிய காரணமாகவும் இருந்திருக்கலாம். பலநூறு ரஷ்ய tanks ஆரம்பத்தில் அழிந்ததாக கூறப்படுகிறது. […]