நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற Special Competitive Studies Project (SCSP) என்ற வல்லுனர்களின் அமர்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை குறிப்பிடும் Voice of America (VoA) செய்தி சேவை சீனா தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவை வேகமாக பின் தள்ளுகிறது என்று கூறியுள்ளது. முன்னாள் Google நிறுவன CEO Eric Schmidt தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வு 2030ம் ஆண்டுவரை அமெரிக்கா தொழில்நுட்பத்தில் பிரதான ஆளுமையை கொண்டிருக்க வழிகளை ஆராய்கிறது. சீனா தொழில்நுட்ப ஆளுமையை பெற்றால் பல டிரில்லியன் […]
சீனாவின் Changsha நகரில் உள்ள 42 மாடிகளை கொண்ட அலுவலக கட்டிடம் ஒன்று இன்று வெள்ளி எரிந்துள்ளது. தீ விபத்து பாரதூரமானது என்றாலும் உயிர் பலி எதுவும் இடம்பெற்றதாக இதுவரை அறியப்படவில்லை. சுமார் 218 மீட்டர் (715 அடி) உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2000ம் ஆண்டில் பாவனைக்கு வந்திருந்தது. இந்த கடிதத்தில் China Telecom என்ற தொலைத்தொடர்பு நிறுவனமே நிலைகொண்டிருந்தது. தீ உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் தணிக்கப்பட்டு உள்ளது. தீக்கான காரணம் இதுவரை […]
சிரியாவின் அல் அசாத் அரசை கவிழ்த்து இஸ்ரேலுக்கும் மேற்குக்கும் ஆதரவான கைப்பொம்மை அரசை அமைக்க மேற்கு சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்தது. ஆனால் ஆசாத் ரஷ்யாவின் பூட்டினின் உதவியை நாட, ரஷ்ய படைகள் சிரியா வந்து அசாத் அரசை காப்பாற்றியது. தமது விருப்பப்படி அசாத் அரசு கவிழாது என்பதை உணர்ந்த மேற்கும், மேற்குடன் இணைந்து இயங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் மெல்ல தமது தூதரகங்களை சிரியாவின் தலைநகரில் மீண்டும் இயக்க ஆரம்பித்தன. மேற்குடன் இணைந்து சிரியாவை தாக்கிய […]
ரஷ்யாவின் யுகிரைன் யுத்தம் தொடர்பாக சீன சனாதிபதி கவலை (concern) கொண்டுள்ளதுடன் கேள்விகளையும் முன்வைத்துள்ளார் என்று இன்று வியாழன் ரஷ்ய சனாதிபதி பூட்டின் கூறியுள்ளார். ஆனாலும் சீனாவின் நடுநிலைமை கொள்கையை பூட்டின் பாராட்டி உள்ளார். இவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் Shanghai Cooperation Organization (SCO) அமர்வில் சந்திக்கிறார்கள். இந்திய பிரதமரும் இந்த அமர்வுக்கு செல்கிறார். “யுகிரைன் விசயத்தில் சீனா கொண்டுள்ள நடுநிலைமை கொள்கையை நாம் உயர்வாக மதிக்கிறோம்” என்று சீன சனாதிபதி சீக்கு கூறியுள்ளார் பூட்டின். […]
இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட அஜர்பைஜான் (Azerbaijan), கிறீஸ்தவ பெரும்பான்மை ஆர்மீனியாவுக்கும் (Armenia) இடையில் இடம்பெற்ற மோதலுக்கு ஆர்மீனியா தரப்பில் சுமார் 50 படையினர் பலியாகி உள்ளனர். 2020ம் ஆண்டு இடம்பெற்ற மோதலுக்கு பின் அதிக அளவு படையினர் தற்போதைய மோதலுக்கு பலியாகி உள்ளனர். ஆர்மினியா தனது படைகளில் குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளது. சுமார் 50 Azeri படையினர் பலியாகி உள்ளதாக அஜர்பைஜான் படை கூறியுள்ளது. ரஷ்யாவின் பூட்டின் இரு தரப்பையும் […]
ஐ.நா. தயாரித்து வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி சுட்டியில் (Human Development Index, HDI) இலங்கை 0.782 புள்ளிகளை பெற்று 73ம் இடத்தில் உள்ளது. 2020ம் ஆண்டில் இலங்கை 75ம் இடத்தில் இருந்தது. இந்த கணிப்பில் 0.50 முதல் 0.70 வரையான புள்ளிகளை கொண்ட நாடுகள் medium வளர்ச்சி கொண்டவையாக கருதப்படுகிறது. அதனால் இலங்கை medium வளர்ச்சியை கொண்ட நாடாகிறது. அத்துடன் இலங்கையில் சராசரி வாழ்கை காலம் 76.4 ஆண்டுகளாக உள்ளது. இக்கணிப்பில் 0.962 புள்ளிகளை […]
IT சேவைகள் மூலம் உலகில் அதிக வருமானம் பெறும் நாடாக இந்தியா உள்ளது. 2021-2022 வர்த்தக ஆண்டில் இந்தியா $150 பில்லியன் வெளிநாட்டு வருமானத்தை பெற்று உள்ளது என்கிறது Reserve Bank of India (RBI). இந்தியாவிடம் இருந்து IT சேவைகளை பெற்ற நாடுகளில் அமெரிக்கா முதலாம் இடத்தில் உள்ளது. கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு நாடுகளும் மொத்தம் $86.9 பில்லியன் பெறுமதியான IT சேவையை இந்தியாவிடம் இருந்து பெற்று உள்ளன. அது இந்தியாவின் […]
சீனா ஒலியிலும் 33 மடங்கு வேகத்தில் (Mach 33, மாக் 33) காற்றோட்டம் ஏற்படுத்தக்கூடிய wind tunnel என்று அழைக்கப்படும் காற்று குகையை தயாரித்து உள்ளது. இவ்வகை காற்று குகைகளிலேயே விமானங்களின் இறக்கைகள், ஹெலிகளின் காற்றாடிகள், ஏவுகணைகள், ஏவு கலங்கள் ஆகியயன தயாரிப்புக்கு முன் ஆய்வு செய்யப்படும். 2018ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட JF-22 என்ற இந்த wind tunnel ஊடே காற்று சுமார் 11,500 m/sec வேகத்தில் செல்லும். ஒலியின் வேகம் 343 m/sec ஆக […]
சீனாவும், இந்தியாவும் தமது படைகளை சில எல்லை பகுதிகளில் இருந்து பின் நகர்த்துகின்றன. இமய மலைக்கு மேற்கே Gorga Hot Spring பகுதியில் நிலைகொண்டிருந்த இரு தரப்பு படைகளுமே தற்போது எல்லையோரத்தில் இருந்து பின் நகர்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற ஆயுதம் அற்ற மோதலுக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகி இருந்தனர். அன்றில் இருந்து இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்துள்ளது. ஆனாலும் இருதரப்பு படையினரும் தொடர்ந்தும் பேச்சுக்களை […]
பிரித்தானியாவின் இராணி Queen Elizabeth II இன்று தனது 96 ஆவது வயதில் மரணமானார் என்ற செய்தியை Buckingham Palace அறிவித்துள்ளது. இவர் மரணிக்கும் வேளையில் ஸ்காட்லாந்தில் உள்ள Balmoral அரண்மனையில் இருந்துள்ளார். அரச குடும்ப அறிவிப்பின்படி இராணி “episodic mobility problem” காரணமாக அண்மை காலங்களில் முடங்கி இருந்துள்ளார். அதனால் இந்த கிழமை பதவி ஏற்ற புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் இராணியின் மனைக்கு சென்றே பதவி ஏற்பை செய்து இருந்தார். Elizabeth II […]