கனடியர் அமெரிக்கா செல்வது பெப்ரவரி மாதம் 40% ஆல் குறைந்து உள்ளது என்று Flight Centre கூறியுள்ளது. தரை மூலம் கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் தொகை பெப்ரவரி மாதம் 500,000 ஆல் குறைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2.13 மில்லியன் கனடியர் கார் மூலம் அமெரிக்கா சென்று இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 1.45 மில்லியன் கனடியர் மட்டுமே கார் மூலம் அமெரிக்கா சென்று இருந்தனர். […]
அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா 84% இல் இருந்து 125% ஆக உயர்த்தி உள்ளது. ரம்ப் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்திய பின்னரே சீனா தனது வரியை 125% ஆக உயர்த்தியது. அத்துடன் அமெரிக்க பொருட்கள் மீதான 125% வரியே இறுதி வரி என்றும், இதற்கு மேல் தமது வரி உயர்த்தப்படாது என்றும் சீனா கூறியுள்ளது. இதற்கு மேலான வரி ஒரு number game மட்டுமே என்றுள்ளது சீனா. […]
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடரும் ரம்பின் பொருளாதார யுத்தம் காரணமாக சீனா அமெரிக்க ஹொலிவூட் திரைப்படங்களை வியாழன் தடை செய்துள்ளது. ஒரு காலத்தில் ஹொலிவூட் திரைப்படங்கள் சீனாவை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தாலும், அண்மைக்கால தரமான சீன திரைப்படங்கள் சீனாவில் பெரும் ஆதரவை பெற்றுள்ளன. அதனால் சுமார் 80% சீன திரைப்பட வருமானம் சீன திரைப்படங்கள் மூலமே கிடைக்கின்றன. உதாரணமாக சீனா தயாரித்த Ne Zha 2 என்ற கார்ட்டூன் திரைப்படம் அமெரிக்காவின் Pixar நிறுவனம் தயாரித்த Inside […]
சீனாவின் 84% பதிலடி வரியால் விசனம் கொண்ட ரம்ப் 104% ஆக அறிவித்திருந்த சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை புதன்கிழமை 125% ஆக உயர்த்தி உள்ளார். அதேவேளை பங்கு சந்தைகளின் பாரிய இழப்புகளை குறைக்கும் நோக்கில் ஏனைய நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 தினங்களுக்கு 10% ஆக மட்டும் கொண்டிருக்கவும் அறிவித்துள்ளார். சீனா மீதான இந்த புதிய 125% வரி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிகையான இருதரப்பு வரிகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான […]
அமெரிக்க சனாதிபதி சீன பொருட்களுக்குகான இறக்குமதி வரியை செவ்வாய்க்கிழமை 54% இல் இருந்து 104% ஆக அதிகரித்த பின் இன்று புதன் சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% இல் இருந்து 84% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் மேலும் கவிழும் வாய்ப்பு அதிகமாகிறது. ரம்ப் இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின் சீன பொருட்களுக்கு முதலில் 10% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். பின் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் 10% வரியை அறிவித்தார். […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த இறக்குமதி வரிகள் காரணமாக கடந்த 3 தினங்களாக அமெரிக்க மற்றும் உலக பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன. இதற்கிடையில் நேற்று திங்கள் X அல்லது Twitter எனப்படும் social media வில் வெளிவந்த பொய் செய்தி ஒன்று அமெரிக்க பங்கு சந்தை சுட்டிகளை பல ட்ரில்லியன் பெறுமதியால் அதிகரிக்க செய்து, பின் சில நிமிடங்களில் மீண்டும் வீழ்த்தி உள்ளது. இந்த social media பொய் செய்தியால் பலர் பெருமளவு பணம் […]
அமெரிக்க பொருட்களுக்கு சீனா அண்மையில் நடைமுறை செய்த 34% மேலதிக பதிலடி வரியை செவ்வாய்க்கு முன்னர் நீக்காவிட்டால் சீனா மீதான இறக்குமதி வரியை தான் மேலும் 50% ஆல் அதிகரிக்க உள்ளதாக சனாதிபதி ரம்ப் திங்கள் மிரட்டி உள்ளார். ரம்பின் 50% மிரட்டலுக்கு பின் சீனாவை அழுத்துவது அல்லது மிரட்டுவது (pressuring or threatening) சரியான வழியல்ல என்று சீன தூதரகம் கூறியுள்ளது. சுமார் 45,000 ஆக உயர்ந்து இருந்த அமெரிக்க DOW பங்கு சந்தை சுட்டி […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த வரி யுத்தத்தால் இன்று திங்கள் மீண்டும் ஆசிய, ஐரோப்பிய பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஜப்பானின் Nikkei பங்கு சந்தை சுட்டி திங்கள் 6.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அஸ்ரேலிய, தென் கொரிய, இந்திய சுட்டிகளும் கூடவே சரிந்து உள்ளன. சீனாவின் Shanghai Composite பங்கு சந்தை சுட்டி திங்கள் 8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹாங்காங் Hang Seng சுட்டி திங்கள் 13% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனியின் […]
வரும் ஜூன் மாதம் சேவைக்கு வரவுள்ள Huajiang (குவாஜியாங்) Canyon Bridge என்ற Baipan ஆற்றை கடக்கும் சீன பாலம் உலகின் மிக உயர்ந்த பாலமாகிறது. இந்த பாலத்தில் இருந்து அதிகூடிய பள்ளமான பகுதியின் ஆழம் 625 மீட்டர் (2,051 அடி) ஆக இருக்கும். தற்போது ஆற்றுடன் கூடிய இந்த பள்ளத்தாக்கை கடக்க 70 நிமிடங்கள் தேவைப்படுகிறது. மேற்படி பாலம் சேவைக்கு வந்தபின் அதே தூரத்தை 1 நிமிடத்தில் கடக்கலாம். சீனாவின் Guizhou மாநிலத்தில் கட்டப்படும் இந்த […]
மார்ச் மாதம் 23ம் திகதி பலஸ்தீன செஞ்சிலுவை சங்க மருத்துவர்களுடன் சென்ற 15 தொண்டர்கள் இஸ்ரேலின் படைகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் உடல்களை இஸ்ரேல் படைகள் ஆழமற்ற குழிகளில் புதைத்து இருந்தன. இஸ்ரேல் முதலில் மரணித்தோர் ஹமாஸ் மற்றும் ஜிஹாத் பயங்கரவாத உறுப்பினர் என்று கூறியிருந்தது. ஆனால் ஐ.நா. மரணித்தோர் மருத்துவர் என்றது. சர்வதேச குழுக்களின் கடுமையான முயற்சியின் பின்னரே இஸ்ரேல் ஐ.நா. ஆதரவு அதிகாரிகள் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். படுகொலை நிகழ்ந்த இடத்தில் […]