ஆக்கிரமித்த 3,138 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறது இஸ்ரேல்

ஆக்கிரமித்த 3,138 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் West Bank நிலத்தில் 3,138 ஏக்கரை தனது நிலமாக்க இன்று புதன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்ரேல் தனக்கு சாதகமான இருக்கும் வகையில் தானே நடைமுறை செய்த சட்டப்படி ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் தனியார் நிலங்களை இஸ்ரேல் தனது இராணுவத்தின் Civil Administration என்ற பெயரின் கீழ் வகைப்படுத்தினால் அந்த நிலங்களின் பலஸ்தீன உரிமையாளர் தமது உரிமைகளை உடனடியாக இழப்பர்.

மேற்படி நிலங்களில் இஸ்ரேல் பின்னர் யூதர்களை குடியமர்த்தும்.

Jericho என்ற பலஸ்தீனர் செறிந்து வாழும் West Bank நகருக்கு அண்மையிலேயே மேலே கூறப்பட்ட 3,138 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த  ஆக்கிரமித்த நிலத்தில் 5,000 யூத வீடுகளை அமைக்க இஸ்ரேலின் நிதி அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.