ஹமாஸின் புதிய தலைவரும் படுகொலை செய்யப்பட்டார் 

ஹமாஸின் புதிய தலைவரும் படுகொலை செய்யப்பட்டார் 

ஹமாஸின் புதிய தலைவரான Yahya Sinwar என்பவரும் தம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இவரே கடந்த ஆண்டு அக்டோபர் 17 இஸ்ரேல் மீது செய்யப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் புதன்கிழமை வீசிய குண்டு ஒன்றுக்கே Sinwar பலியானதாகவும், தாம் DNA பரிசோதனை செய்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

ஹமாஸின் இராணுவ தலைவரான Deif இஸ்ரேல் குண்டுக்கு பலியானதால் கடந்த மாதமே Sinwar ஹமாஸின் இராணுவ தலைவர் ஆனார்.

இந்த செய்தியை அறிந்த அமெரிக்க சனாதிபதி பைடென் இஸ்ரேல் பிரதமருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த படுகொலை பலஸ்தீனரை அந்நியர்கள் தொடர்ந்தும் ஆட்சி செய்ய வழி வகுக்கலாம்.

அதேவேளை தென் லெபனானில் 1 மேஜர், 1 கேப்டன், 3 Staff Sgt. ஆக மொத்தம் 5 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர்.